இன்று தந்தையர் தினம்... ஒவ்வொரு தந்தையும் பாராட்ட வேண்டிய "மகள்" சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட்!
சென்னை: ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிறு தந்தையர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
அப்பா என்றாலே கண்டிப்பு என்ற பிம்பம் மாறி, சமீபகாலமாக அப்பாக்களின் அன்பு குறித்த புரிதல் மக்களிடையே உருவாகத் தொடங்கியிருக்கிறது.
கருவில் பத்து மாதம் தன்னை சுமந்து பெற்ற தாயின் பாசத்திற்கு சற்றும் குறைவில்லாதது தந்தையின் பாசம் என்ற விழிப்புணர்வு மகன்கள் மற்றும் மகள்களிடம் ஏற்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

உலக தந்தையர் தினம்...
எனவே, தந்தைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிறு உலக தந்தையர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கம்போல, இந்த தினமும் மேலை நாட்டவர்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும், சமீபகாலமாக இது இந்தியாவிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

வரலாறு...
கடந்த 1909ம் ஆண்டு சொனாரா லுாயிஸ் ஸ்மார்ட் டாட் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த இளம் பெண் தான், தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. அன்னையர் தினம் கொண்டாடும் போது, தந்தையர் தினம் ஏன் கொண்டாடக்கூடாது என இவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

காரணம்...
தனது தாயாரின் மறைவுக்கு பின்னர், தந்தை வில்லியம் ஆறு குழந்தைகளை சிரமப்பட்டு வளர்த்து ஆளாக்கியதை நினைவு கூறும் வகையில், தந்தையர் தினத்தைக் கொண்டாட வேண்டும் என இவர் வலியுறுத்தினார்.

விடுமுறை...
இவரது முயற்சிகளின் பலனாக 1910ம் ஆண்டு முதன்முதலில் அமெரிக்காவில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. பின்னர் 1966ம் ஆண்டு இந்த தினத்திற்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 1972ம் ஆண்டு, அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்த ரிச்சர்ட் நிக்சன், தந்தையர் தினத்திற்கு விடுமுறை அறிவித்தார்.

ஜூன் 3வது ஞாயிறு...
தந்தையர் தினமானது நாட்டிற்கு நாடு வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நாடுகளில் இன்றைய தினமே தந்தையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வாழ்த்துக்கள்...
தந்தையர் தினத்தையொட்டி பிள்ளைகள் தங்களது அப்பாக்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். எப்போதும் தன் ஆசைகளை மறைத்து குடும்பத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் அப்பாவிற்கு பிடித்தமான பொருட்களை பரிசாக அளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

கவிதைகள்...
சமூகவலைதளங்களில் தந்தையர் தினக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. பலர் தங்களது புரொபைல் பிக்சர்களை மாற்றி, அப்பாக்களின் புகைப்படங்களை வைத்துள்ளனர். அதோடு, அப்பாக்களின் பாசத்தைப் பற்றிய கவிதைகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications