பிறந்தது 2016 புத்தாண்டு: நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்! சென்னையில் கோலாகலம் !!
சென்னை: உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியது. இந்தியாவிலும் உற்சாகமாக 2016 ஆம் ஆண்டு வரவேற்கும் விதமாக உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
பழையன மறந்தும் புதிய சிந்தனைகள், எதிர்பார்ப்புகள், நம்பிக்கையோடு பிறந்துவிட்டது புதிய ஆண்டு 2016 உலகம் முழுவதும் முக்கிய நகரங்களில் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்றனர்.
2015-ம் ஆண்டு நிறைவடைந்து 2016-ம் ஆண்டு துவங்கியது, முன்னதாக உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் புத்தாண்டு பிறந்தது. புதிய ஆண்டை வரவேற்கும் விதமாக அந்நாட்டு தலைநகர் வெலிங்டனில் வான வேடிக்கைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியது.
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் வாண வெடி வெடித்து புத்தாண்டை இனிதே வரவேற்றனர். தைவான் தலைநகர் தைப்பே நகரில் உயரமான கட்டடம் ஒன்றில் வண்ண வாண வேடிக்கையுடன் புத்தாண்டை கொண்டாடினர். தாய்லாந்திலும் புத்தாண்டையொட்டி பட்டாசு வெடித்து அந்நாட்டு மக்கள் கொண்டாடினர். இதையடுத்து ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வாண வேடிக்கையுடன் புத்தாண்டை ஆடல் பாடலுடன் அந்நகர மக்கள் வரவேற்றனர்.

புத்தாண்டு பிறந்ததையொட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் ஆடல் பாடல் கொண்டாட்டம் என களைகட்டியது, தமிழகத்தில் சர்ச், கோயில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடந்தது. ஒருவரையொருவர் புத்தாண்டு வாழ்த்தினை பரிமாறிக்கொண்டனர். புத்தாண்டை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்காணோர் திரண்டனர். பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்த போதும் இந்தாண்டும் வழக்கம் போல் சென்னை வாசிகள் புத்தாண்டை கொண்டாடினர். பெசண்ட்நகர் கடற்கரையில் திரண்ட ஆயிரக்கணக்காணோர் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications