புதுக்கோட்டை: வறுமையில் வாடும் எம்பிபிஎஸ் மாணவிக்கு ரூ.75,000 நிதியுதவி - முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏழ்மை காரணமாக எம்பிபிஎஸ் படிக்க முடியாமல் தவித்து வந்த மாணவி மேகலாவிக்கு, ரூ.75000 நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள அணவயல் பூசாரி தெரு பகுதியைச் சேர்ந்தவர் வல்லத்தரசு (55) வாசுகி தம்பதி. இவர்களுக்கு மேகலா (18) என்ற மகனும் மோகனதாஸ் (13) என்ற மகளும் உள்ளனர். வல்லத்தரசு ஆடுகள் மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தை வைத்தே வல்லத்தரசு குடும்பம் நடத்தி வருகிறார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அணவயல் எல்.என்.புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேகலா 10-ம் வகுப்பு படித்து வந்தார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் குறிப்பிடும்படியாக 473 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார்.
இந்நிலையில், நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொது தேர்வில் மேகலா 1129 மதிப்பெண்களுடன் எடுத்து தேர்ச்சி பெற்றார். மேலும் எம்பிபிஎஸ் படிப்பிற்காக கட் ஆப் 196.25 வாங்கி இருந்ததால், கவுன்சலிங் மூலமாக திருநெல்வேலி மருத்துவக்கல்லூரில் எம்.பி.பி.எஸ். படிக்க இலவசமாக இடம் கிடைத்திருக்கிறது. மேகலாவிற்கு எம்பிபிஎஸ் சீட் கிடைத்தது குறித்து அவரது குடும்பம் மகிழ்சியடைந்த போதிலும், படிப்புச் செலவு தான் சற்று தடங்கலாக இருந்தது.
இந்நிலையில், மேகலாவை எப்படியாவது எம்பிபிஎஸ் படிக்க வைத்துவிட வேண்டும் என கருதி திருநெல்வேலி மருத்துவக்கல்லூரில் சேர்த்துவிட்டனர். விடுதி கட்டணம் மற்றும் புத்தகம் வாங்க கட்டணம் என்று பல ஆயிரங்கள் தேவை என்பதால், சிலரிடம் தேவையான பணம் கடன் வாங்கி மேகலாவை கல்லூரியில் சேர்த்துள்ளனர். படிப்பிற்காக மேலும் பணம் செலுத்த வேண்டும் என்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் ஏழ்மையில் சிக்கித் தவித்து வந்தது மேகலாவின் குடும்பம். மேலும் தமிழக அரசு உதவி உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையறிந்த முதல்வர் ஜெயலலிதா, வறுமையில் வாடும் மேகலாவின் குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு ரூ.75,000 நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications