ஹாசினி கொலை வழக்கு: தீர்ப்பையொட்டி நீதிமன்ற கதவுகள் மூடல், செய்தியாளர்கள், வக்கீல்கள் வெளியேற்றம்
ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்டன.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

ஹாசினி கொலை வழக்கு..நீதிமன்றத்தில் ஆஜரான தஷ்வந்த்- வீடியோ
செங்கல்பட்டு: ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு நீதிமன்றத்தின் கதவுகள் மூடப்பட்டன.
சென்னை மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினியை பக்கத்து வீட்டு இளைஞரான தஷ்வந்த் கடந்த ஆண்டு பலாத்காரம் செய்து கொன்று உடலை எரித்தார்.

இந்த கொடூர கொலை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில் இந்த வழக்கில் செங்கல்பட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.
இதனை முன்னிட்டு கொலையாளி தஷ்வந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளான். இதைத்தொடர்ந்து நீதிபதியின் அறை கதவுகள் மூடப்பட்டுள்ளன.
செய்தியாளர்கள் மற்றும் மற்ற வழக்கறிஞர்கள் வெளியேற்றப்பட்டனர். அரசு மற்றும் போலீஸ் தரப்பு வழக்கறிஞர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications