Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலவச ரேஷன் பொருட்களை வாங்குபவர்களா? 30 நாட்களில் ரேஷன் கார்டு ரத்தாகும் வாய்ப்பு.. உஷார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலவச ரேஷன் பெறுவோராக இருந்தால் உங்களுக்கு ஜூன் 30ஆம் தேதி மிக முக்கியமான நாள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ரேஷன் கார்டுகள் மூலம் ஏழை எளிய மக்களுக்கு குறிப்பிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் இலவச அரிசி வழங்கப்படுகிறது. முதலில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என இருந்ததை அதிமுக ஆட்சியில் இலவச ரேஷன் அரிசி என மாறியது.

இதன் மூலம் ஏழைகள் பசியாற வழிவகை செய்யப்படுகிறது. அப்படிப்பட்ட ரேஷன் கார்டுகள் மூலம் பல நலத்திட்ட உதவிகளையும் மத்திய, மாநில அரசுகள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் இந்த ரேஷன் கார்டுகளில் போலியான முகவரியை கொடுத்து ஒருவர் பல கார்டுகளை வைத்திருக்கிறார்கள்.

Have you linked Aadhar card with Ration card?

இதன் மூலம் வேறு ஒரு பயனாளிக்கு கிடைக்க வேண்டிய அரசின் சலுகைகள் ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்திருக்கும் ஒரு சிலருக்கே கிடைத்துவிடுகிறது. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்க அரசு ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. அதன்படி ஆதாருடன் தங்கள் ரேஷன் கார்டுகளை இணைக்க உத்தரவிட்டது.

இதற்கான காலக்கெடு வரும் ஜூன் 30 ஆம் தேதி வரை உள்ளது. ரேஷன் கார்டையும் ஆதாரையும் இணைத்தால் நீண்ட காலத்திற்கு இலவச ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த நிலையில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி ரேஷன் கார்டு இணைக்கும் தேதி முடிவடைய இன்னும் 1 மாதம்தான் இருக்கிறது. இது தொடர்பாக அரசு சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைத்த பிறகு தேவைப்படுபவர்களுக்கு அவர்களின் பங்கு உணவு தானியங்கள் கிடைக்கிறதா இல்லையா என்பதை எளிதாக உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். மேலும் ரேஷன் கார்டை ஆதாருடன் இணைக்காமல் இருந்தால் அதை விரைவில் செய்து விட வேண்டும். ரேஷன் பொருட்களை வாங்க முடியாது. உங்களுடைய ரேஷன் கார்டும் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது.

ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசி தேதி ஜூன் 30 ஆம் தேதியாகும். உணவு மற்றும் பொது விநியோகத் துறை இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. எனவே இன்னும் 30 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், இலவச ரேஷன் பெற்று வரும்பவர்கள் தங்களின் ரேஷன் கார்டை ஆதார் கார்டுடன் இணைத்துக் கொள்ளுங்கள்.

Have you linked Aadhar card with Ration card?

ரேஷன் கார்டை ஆதாருடன் இணைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். முதலில் uidai.gov.in என்ற இணையத்தில் செல்லவும். அதில் Start Now என்பதை கிளிக் செய்யவும். அடுத்து உங்கள் முகவரி, மாவட்டம் போன்ற விவரங்களை நிரப்பவும். இப்போது Ration Card benefit என்ற ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.

அதன்பிறகு ஆதார் நம்பர், ரேஷன் கார்டு எண், மின்னஞ்சல் முகவரி, செல்போன் எண் போன்றவற்றை நிரப்ப வேண்டும். பதிவு செய்யப்பட்ட செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை நிரப்பி சப்மிட் கொடுக்க வேண்டும். இது ஆன்லைன மூலம் இணைப்பது. இதே இணையதள வசதி இல்லாதவர்கள் தங்களது ரேஷன் கடைக்கு ஆதார் எண் நகல், ரேஷன் கார்டு நகலுடன் செல்ல வேண்டும்.

ரேஷன் கார்டுதாரரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களை எடுத்துக் கொண்டு ரேஷன் மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். எனவே ரேஷன் கார்டுடன் ஆதாரை இணைப்பது என்பது வெளிப்படையான பொது விநியோக முறையை அடைவதற்கான ஒரு முக்கியமான படியாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+