சென்னை வெள்ளத்தில் பாஸ்போர்ட்டை இழந்தோருக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட்: சுஷ்மா ஸ்வராஜ்
சென்னை: சென்னையில் வெள்ளத்தால் சேதம் அடைந்த அல்லது காணாமல் போன பாஸ்போர்ட்டுகளுக்கு பதில் இலவசமாக புதிய பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையால் வெள்ளப்பெருக்கு எடுத்தது. நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததது. வெள்ளத்தில் சிக்கி மக்கள் முக்கிய ஆவணங்கள், சான்றிதழ்கள், பாஸ்போர்ட்டுகள், விலை உயர்ந்த பொருட்களை இழந்து நிற்கிறார்கள்.

இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ட்விட்டரில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது,
வெள்ளத்தால் உங்களின் பாஸ்போர்ட் சேதம் அடைந்திருந்தாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ சென்னையில் உள்ள 3 பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களுக்கு தயவு செய்து செல்லுங்கள். அங்கு உங்களுக்கு இலவசமாக புதிய பாஸ்போர்ட் அளிக்கப்படும். தயவு செய்து இதை ரீட்வீட் செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
சுஷ்மா ஸ்வராஜின் இந்த அறிவிப்பு சென்னை மக்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications