ஸ்டேட் ரேங்க் வாங்கியவர்கள் பேட்டியில் ஒரு விஷயத்தை கவனிச்சீங்களா?
சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநிலம் மற்றம் மாவட்ட அளவில் முதல், இரண்டாவது, மூன்றாவது இடத்தை பிடித்துள்ள மாணவ, மாணவியரிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
முன்பு எல்லாம் பத்தாம் வகுப்பு மற்றும் ப்ளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநிம் மற்றும் மாவட்ட அளவில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவியர் டாக்டர் ஆவேன், என்ஜினியர் ஆவேன் என்று தான் கூறுவார்கள்.

இந்நிலையில் மாணவ, மாணவியரிடம் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு பத்தாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர் சிவகுமார் சி.ஏ. படிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார். தமிழை முதல் பாடமாக எடுத்தவர்களில் மாநிலத்தில் முதலிடத்தை பிடித்த ஜனனியோ அரசியலுக்கு வர விரும்புகிறார்.
ப்ளஸ் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் வாங்கிய மாணவிகளில் சிலர் சி.ஏ., எம்.பி.ஏ. படிக்க, தொழில் அதிபராக விரும்புவதாக கூறியுள்ளனர். ப்ளஸ் 2 தேர்வில் மாற்றுமொழி பிரிவில் முதலிடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த மாணவி சத்ரியா பிரதமர் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மாணவ, மாணவியரிடம் ஏற்பட்டுள்ள மாற்றத்தை ஏற்று அவர்களின் ஆசையை பெற்றோர் நிறைவேற்றி வைக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications