முத்துக்குமாரசாமி தற்கொலை: அக்ரி.கிருஷ்ணமூர்த்தி ஜாமீன் மனு ஜூன் 1க்கு ஒத்திவைப்பு
நெல்லை: முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் மூன்றாவது முறையாக ஜாமீன் கோரி தாக்கல் செய்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் மனு ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நெல்லை வேளாண் பொறியாளர் முத்துக்குமராசாமி, கடந்த பிப்ரவரி மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேளாண்மைத்துறை தலைமை பொறியாளர் செந்தில் ஆகியோர் கடந்த ஏப்ரல் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இருவரும் தற்போது பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இருவரும் ஜாமீன் கேட்டு நெல்லை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, இருவரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் ஏப்ரல் 30ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டன. இந்நிலையில், இருவரும் ஜாமீன் கேட்டு 2வது முறையாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு கடந்த வாரம் விடுமுறை கால நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்நிலையில், 3வது முறையாக அக்ரி கிருஷ்ண மூர்த்தி நேற்று ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கில் சிபிசிஐடி போலீஸாரின் விசாரணை முடியும் தருவாயில் உள்ளது. ரயில்வே போலீஸாரின் விசாரணையும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஜாமீன் கிடைக்கும்பட்சத்தில், நான் தலைமறைவாக மாட்டேன். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவேன். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி, அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 1ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications