கொலை வழக்கு: வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக டக்ளஸ் தேவானந்தாவுக்கு அனுமதி
சென்னை: கொலை வழக்கு தொடர்பான விசாரணையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராவதற்கு இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
1986-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி சென்னை சூளைமேடு பகுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில், திருநாவுக்கரசு உள்பட நான்கு பேர் மீது டக்ளஸ் தேவானந்தா உள்பட பலர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் திருநாவுக்கரசு இறந்தார். இது தொடர்பாக சூளைமேடு போலீஸார், டக்ளஸ் தேவானந்தா உள்பட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தபோது, 1993-ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தா தலைமறைவானார்.
இதனால் அவரைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையை நீதிமன்றம் பிறப்பித்தது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு வந்தால் எனது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை. அதனால், தன் மீதான வழக்கில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதிக்கக் கோரி அமர்வு நீதிமன்றத்தில் டக்ளஸ் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை, அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணையை திரும்பப் பெறவும், வழக்கு விசாரணைக்கு வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராவதற்கும் அனுமதி கோரி டக்ளஸ் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதி சி.டி.செல்வம் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
ஜாமீனில் வெளிவர முடியாத கைது ஆணை நிலுவையில் உள்ளபோது, மனுதாரர் இதர அரசு அதிகாரிகளுடன் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது, அவரைக் கைது செய்வதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
இரு நாடுகளுக்கிடையே இருந்த நல்லுறுவு காரணமாக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனுதாரர் அவரது மனுவில், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மூலம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதாகவும், தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதாகவும் உத்தரவாதம் அளித்துள்ளார்.
ஏற்கெனவே, அவர் மீது 13 முறை தாக்குதல் நடத்த முயற்சி நடந்துள்ளது. அதனால், இந்தியா வந்தால் பாதுகாப்பு இல்லை என மனுதாரர் கருதுகிறார். அவரது யூகத்தை நாம் புறக்கணிக்க முடியாது.
எனவே, மனுதாரரின் மனு மீது அமர்வு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. வழக்கு விôசரணைக்காக வீடியோ கான்பரன்ஸ் மூலம் மனுதாரர் ஆஜராக அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும், விசாரணையின் போது மனுதாரர் நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் கருதினால் அவர் நேரில் ஆஜராக வேண்டும். அவ்வாறு ஆஜராகும்போது அவருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு












Click it and Unblock the Notifications