சிலுக்கு ஸ்மிதாவுடன் ஒப்பிட்டு பெண்ணை திட்டி, தாக்கியவர்கள் மீது வழக்கு....!

சென்னை வள்ளலார்நகரை சேர்ந்தவர் ஜோதி (நிஜப் பெயர் அல்ல). 17 வயதான இவர் தனது தந்தை மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு செய்தார். அதில், எங்கள் வீட்டுக்கு முன்பு கடந்த மே 30-ந் தேதி இரவு 8 மணிக்கு நின்றுகொண்டிருந்தேன். அப்போது அப்பகுதியை சேர்ந்த பீட்டர் என்பவரின் மகன் தேவா என்னை பார்த்து, சிலுக்கு ஸ்மிதா போல நிற்கிறாள் என்று அவதூறாக பேசினார்.
இதில் ஏற்பட்ட பிரச்சினையில், தேவா, அவரது சகோதரர் சார்லஸ், சகோதரி திவ்யா, குமார் ஆகியோர் என்னை அசிங்கமான வார்த்தைகளில் திட்டி, எட்டி உதைத்து தாக்கினார்கள். இதுகுறித்து பழைய வண்ணார்பேட்டை காவல் நிலையத்தில் உடனே புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தகுந்த நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, லலிதாகுமாரி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் புகார் மனு மீது விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பழைய வண்ணார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications