சிலுக்கு ஸ்மிதாவுடன் ஒப்பிட்டு பெண்ணை திட்டி, தாக்கியவர்கள் மீது வழக்கு....!

Subscribe to Oneindia Tamil

HC asks to take action against the attackers in 17 yr old girl's petition
சென்னை: வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த 17 வயதுப் பெண்ணைப் பார்த்து மறைந்த கவர்ச்சி நடிகை சிலுக்கு ஸ்மிதா போல நிற்கிறாயே என்று வாலிபர் கிண்டலடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் அப்பெண்ணை அந்த வாலிபரின் குடும்பத்தினர் தாக்கினர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அப்பெண் தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

சென்னை வள்ளலார்நகரை சேர்ந்தவர் ஜோதி (நிஜப் பெயர் அல்ல). 17 வயதான இவர் தனது தந்தை மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு செய்தார். அதில், எங்கள் வீட்டுக்கு முன்பு கடந்த மே 30-ந் தேதி இரவு 8 மணிக்கு நின்றுகொண்டிருந்தேன். அப்போது அப்பகுதியை சேர்ந்த பீட்டர் என்பவரின் மகன் தேவா என்னை பார்த்து, சிலுக்கு ஸ்மிதா போல நிற்கிறாள் என்று அவதூறாக பேசினார்.

இதில் ஏற்பட்ட பிரச்சினையில், தேவா, அவரது சகோதரர் சார்லஸ், சகோதரி திவ்யா, குமார் ஆகியோர் என்னை அசிங்கமான வார்த்தைகளில் திட்டி, எட்டி உதைத்து தாக்கினார்கள். இதுகுறித்து பழைய வண்ணார்பேட்டை காவல் நிலையத்தில் உடனே புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, தகுந்த நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, லலிதாகுமாரி வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பின் அடிப்படையில் புகார் மனு மீது விசாரணை நடத்தி, அதில் முகாந்திரம் இருந்தால் மேல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பழைய வண்ணார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+