வைகோவுக்கு ஹேப்பி நியூஸ்... கலிங்கப்பட்டி டாஸ்மாக் கடையை இழுத்து மூட ஹைகோர்ட் கிளை உத்தரவு
வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரபரப்பு உத்தரவை பிறப்பித்துள்ளது.
நெல்லை: நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் மதுக்கடையை நிரந்தரமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மதுக் கடையை மூட வேண்டும் என வைகோ சகோதரர் நவிச்சந்திரன் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கலிங்கபட்டி ஊராட்சி தலைவர் வை.ரவிச்சந்திரன் ஹைகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
கலிங்கபட்டியில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கக்கூடாது என கடந்த 2002ல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஊராட்சி தீர்மானத்தை மீறி கடை திறக்கப்பட்டது. இதனால் பெண்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 4ல் நடந்த ஊராட்சி கூட்டத்திலும் கடையை மாற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. ஆனாலும் கடையை மூட எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனிடையே நான் தொடர்ந்த வழக்கில், கலிங்கபட்டியில் இருந்து டாஸ்மாக் கடையை அகற்றுவது குறித்த ஊராட்சி தீர்மானத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசீலிக்குமாறு ஹைகோர்ட் கிளை உத்தரவிட்டது. மறுநாள் என்னை அழைத்து கலெக்டர் விசாரித்தார். பின்னர் எங்களது கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டுள்ளார். எனவே, நீதிமன்றம் தலையிட்டு ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து குறிப்பிட்ட காலத்திற்குள் கடையை மூட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வந்தது. இன்று மனு மீதானா விசாரணை நடைபெற்றது. நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் மதுக்கடையை நிரந்தரமாக மூட உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவால் கலிங்கப்பட்டி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி வைகோ, அவரது தாயார், நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் இது மிகப்பெரிய அளவில் போராட்டமாக வெடித்தது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications