இவர் தான் ஒரே ஒரு சூப்பர் ஹீரோவா?:
அந்தக் கருத்தினைத்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களும் தெரிவித்திருக்கிறார். ஆனால் அந்தத் தீர்ப்பு இங்கேயுள்ள பெரும்பான்மையான ஏடுகளில் விரிவாக வெளியிடப்படாவிட்டாலும் "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேடு, முதல் பக்கத்திலேயே "முன்னாள் நீதிபதி, ஒரு சூப்பர் ஹீரோவா? பல விசாரணைக் குழுக்களுக்கு எதற்காக ஒரே நபர்?" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில்,

"ஒரே நேரத்தில் பல உணர்ச்சிகரமான பொறுப்புகளை ஏற்கக்கூடிய அளவுக்கு இவர் ஒருவர் தான் பொருத்தமானவரா? இவர் தான் ஒரே ஒரு சூப்பர் ஹீரோவா? சென்னை உயர் நீதிமன்றம், திங்கட்கிழமை அன்று, "எவ்வாறு முன்னாள் நீதிபதி ஆர். ரகுபதி அவர்கள் ஏற்கனவே அவர் பல விசாரணைக் குழுக்களில், அதாவது தலைமைச் செயலகம் பற்றிய விசாரணைக் குழுவிலும், தமிழ்நாடு மாநில நுகர்வோர் ஆணையத்தின் தலைவராகவும், குண்டர் தடுப்புச் சட்ட மாநில ஆலோசனை வாரியத்தின் உறுப்பின ராகவும் இருக்கின்ற நிலையில் ஜூன் 28 ஆம் தேதி நடைபெற்ற மவுலிவாக்கம் கட்டிடம் இடிந்த சம்பவம் பற்றிய விசாரணைக்காகவும் நியமிக்கப்பட்டார் என்று வியப்போடு கேட்டார்" என்று தெரிவித்துள்ளது.
தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி அவர்களை இந்த விசாரணைக் கமிஷன் நீதிபதியாக நியமித்தபோதே, நான் இந்தக் கேள்வியை எழுப்பியிருந்தேன். தமிழக அரசு எந்தவிதமான பதிலும் அளிக்கவில்லை. இன்றைக்கு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அமர்வே இத்தகைய கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு தமிழக அரசின் பதில் என்ன? இதே கேள்வியை திமு கழக அரசு இருந்த போது ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி கூறியிருந்தால், ஜெயலலிதா என்ன செய்திருப்பார்? "24 மணி நேரத்திற்குள் "மைனாரிட்டி" அரசு பதவி விலக வேண்டும்" என்று அறிக்கை கொடுத்திருப்பாரா இல்லையா? இன்றைக்கு என்ன செய்யப் போகிறார்? என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications