நால்வர் கொலை வழக்கு: 2 பேரின் தூக்கை ரத்து செய்தது ஹைகோர்ட் மதுரை கிளை
மதுரை: களக்காட்டில் 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரின் தூக்கு தண்டனையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை இன்று ரத்து செய்தது.
திருநெல்வேலி மாவட்டம் களக்காட்டை சேர்ந்த ஜெயக்குமார், அவரது மனைவி மற்றும் மகள்கள் புவனேஸ்வரி ,இந்திரா ஆகிய நான்கு பேரையும் 2007ஆம் ஆண்டு காட்டுராஜா, பெருமாள் ஆகியோர் வெட்டிக் கொலை செய்தனர்.
இந்த வழக்கில் காட்டுராஜா, பெருமாள் ஆகிய இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்து திருநெல்வேலி 2 வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இத் தண்டனையை எதிர்த்து இருவரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இம் மனு மீது நீதிபதிகள் ஜெயச்சந்திரன், நாகமுத்து ஆகியோர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் காட்டப்படாததால், காட்டு ராஜா, பெருமாள் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்யப்படுவதாக நீதிபதிகள் இன்று தீர்ப்பு அளித்தனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட ஜெயக்குமார் குடும்பத்துக்கு அரசு சார்பில் ரூ.5 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications