சேலம்: 6 பேர் கொலை வழக்கிலிருந்து பாரப்பட்டி சுரேஷ் விடுதலை
சேலம்: லம் 6 பேர் கொலை வழக்கில் இருந்து வீரபாண்டி ஆறுமுகத்தின் அண்ணன் மகன் பாரப்பட்டி சுரேஷ் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டி செளடாம்பிகா நகர் அனெக்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் குப்புராஜ் (78). இவரது மனைவி சந்திராம்மாள் (72). இவர்களது மகன் ரத்தினம் (45),மருமகள் சந்தானகுமாரி (40), பேரன் கெüதமன் (20), பேத்தி விக்னேஸ்வரி (வயது-13) ஆகிய 6 பேரும் கடந்த 2010-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி இரவு மர்ம நபர்களால் கொடூரமான முறையில் படுகொலைசெய்யப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார், கொல்லப்பட்ட குப்புராஜின் மகன் சிவகுரு, இவரது மனைவி மாலா, மகள் யுவப்பிரியா, மகன் கோகுல், மருமகன் ரஜினி, திமுக பிரமுகர் பாரப்பட்டி சுரேஷ்குமார்,வழக்குரைஞர் சம்பத், செந்தில்குமார், சேகர் ஆகிய 9 பேரைக் கைது செய்தனர்.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனான பாரப்பட்டி சுரேஷ்குமார், சம்பவம் நடைபெற்ற காலத்தில் சேலம் மாவட்ட ஊராட்சிக் குழுவின் துணைத் தலைவராக பதவி வகித்து வந்தார்.
இந்த நிலையில், ஆறு பேர் கொலை வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்றும், எனவே தன்னை வழக்கில் இருந்து விடுவிக்குமாறும் பாரப்பட்டி சுரேஷ்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனு மீதான விசாரணை முடிவடைந்து ஒரு மாதம் ஆகியிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை தீர்ப்புவழங்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி வாசுகி, பாரப்பட்டி சுரேஷ்குமாரை ஆறு பேர் கொலை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.
-
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி -
டிரம்ப்பை ஒன்றுகூடி அடிக்கும் வளைகுடா நாடுகள்.. அமெரிக்காவுக்கு பெரிய செக்! எதிர்பார்க்கவே இல்லை -
அமெரிக்க பாதுகாப்பில் பெரிய ஓட்டை! கச்சிதமாக வேலையை முடித்த ஈரான்! சீனா சொன்ன மேட்டர்! -
உலகப்போர் 3.. கிளைமேக்ஸை நோக்கிச் செல்கிறது ஈரான் போர்.. அமெரிக்கா கையில் எடுக்கும் அணுகுண்டு! -
எக்சிட் பிளான் இல்லை.. டிரம்பிற்கு 'நரகமாக' மாறும் ஈரான்.. அணு ஆயுதத்தை கையில் எடுக்கும் அமெரிக்கா!












Click it and Unblock the Notifications