Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடராஜனின் பெரிய மனசு.. “என்னைவிட திறமை!” தமிழக கிரிக்கெட்டின் அடுத்த நம்பிக்கை - யார் இந்த கௌதம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன், தான் நடத்தி வரும் கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று டிஎன்பிஎலில் மதுரை அணிக்காக விளையாடி வரும் கௌதம் என்ற வீரர் தன்னைவிட நல்ல திறமையானவர் என்று மனதார தெரிவித்து இருக்கிறார். தன்னுடைய கிரிக்கெட் அகாடமியின் செயல்பாடுகள் குறித்தும் அவர் பேசி உள்ளார்.

யார்க்கர் கிங் என்று அழைக்கப்படும் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் நடராஜன் வழக்கம்போல் இந்த ஆண்டும் ஐபிஎல் தொடரில் கலக்கி வருகிறார். இந்த நிலையில் முன்னாள் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் அருண் கார்த்திக் யூடியூப் சேனலில் நடராஜனை பேட்டி எடுத்து இருக்கிறார். அப்போது டிஎன்பிஎல், ஐபிஎலில் தனக்கு வாய்ப்பு கிடைத்தது, இந்திய அணிக்காக விளையாடிய அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்.

He is more talented than me - Yorker Natarajan on TNPL player Natarajan

இதில் நடராஜன் தொடங்கிய கிரிக்கெட் அகாடமி குறித்து அருண் கார்த்திக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நடராஜன், "நான் 12 ஆம் வகுப்பு படித்த நேரத்தில் டென்னிஸ் பந்தில் விளையாடியபோதே, என் அண்ணன் கிரிக்கெட் அகாடமி தொடங்கி பயிற்சியளிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். எதை நினைத்து அவர் அப்படி சொன்னார் என்று தெரியவில்லை. 2016ல் ஐபிஎல் ஆடியபோதே அகாடமியை தொடங்கிவிட்டோம்.

அப்போது சிறிய அளவில் தொடங்கினோம். உள்ளூரிலிருந்து பலர் வந்தார்கள். வெளியீரில் இருந்தும் கேட்டு வருவார்கள். இங்கு தங்கி கஷ்டப்பட வேண்டும். அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்றும் தெரியாது. எனவே சேலத்துக்கு அருகில் உள்ளவர்களை வைத்து பயிற்சி கொடுக்க தொடங்கினோம். என் அண்ணன் தடகளம், கபடிக்கு பயிற்சியளிக்கிறார். நன்றாக படிப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்கிறோம்.

He is more talented than me - Yorker Natarajan on TNPL player Natarajan

எங்களை பார்த்து அருகருகே உள்ள ஊர்களிலும் இதேபோல் செய்கிறார்கள். இது பெரிய விசயம். அந்த வகையில் என் அண்ணனுக்கு ரொம்ப சந்தோசம்." என்றார். அப்போது அருண் கார்த்திக், "எங்கள் மதுரை அணியில் கௌதம் என்ற வீரர் விளையாடிக் கொண்டு இருக்கிறார். அவர் உன்னை விட திறமையானவன் என்று நிறைய இடத்தில் சொல்லி இருக்கிறேன்." என்றார்.

இதை கேட்ட நடராஜன் எந்த தயக்கமும் காட்டாமல், "நானும் ஒத்துக்கொள்கிறேன். அதை நான் இல்லை என்று சொல்லவே இல்லை. என்னை விட அவர் அதிக திறமையானவர். உங்களிடம் நான் அப்போதே சொல்லி இருக்கிறேன். என்னைவிட அவருக்கு 2 மடங்கு திறமை உள்ளது. ஏனென்றால் அவர் பேட்டிங்கும் விளையாடுகிறார். என்னை போன்று அடுத்து அவர் தான் வருவார் என்று நினைக்கிறேன்." என்றார்.

அப்போது அருண் கார்த்திக், "கௌதமை எடுக்கும்போது உங்களுகுதான் முதலில் நான் போன் செய்தேன். அவர் வேற லெவலில் பால் போடுவார் என்று நீங்கள் சொன்னீர்கள். அந்த மனசுதான் உங்களை இந்த அளவுக்கு கொண்டு வந்துள்ளது." என்று சொல்ல, நடராஜன், "என்னை விட நன்றாக பந்துவீசினால் அதை ஒத்துக்கொள்ள வேண்டும்." என்றார்.

உடனே அருண் கார்த்திக், "அவரை மட்டுமல்ல. இவரை எடுத்துக்கொள்ளுங்கள், அவரை எடுத்துக்கொள்ளுங்கள் என்று பலருக்கு உதவுகிறீர்கள்." என்றார். இதை கேட்ட நடராஜன், "எப்போதும் ஒரு வழிகாட்டி வேண்டுமல்லவா? அவர்களுக்காக யார் போய் பேசுவது? அவர்களுக்கு என்னவென்று தெரியாது. இப்போது நான் வந்திருக்கிறேன். எனக்கு தெரிகிறது. உங்களை போன்ற 4 பேர் உதவி செய்கிறீர்கள்.

He is more talented than me - Yorker Natarajan on TNPL player Natarajan

அவர்களிடம் நான் விளையாட வையுங்கள் என்று சொல்ல மாட்டேன். அவர்களிடம் திறமை இருந்தால் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்வேன். இங்கிருந்து சென்ற எல்லோருமே நன்றாக விளையாடி இருக்கிறார்கள். பெரியசாமி வந்தார். கௌதம் வந்துள்ளார். அரவிந்த் வந்துள்ளார். இன்னும் அப்படியே வருவார்கள். ஒரு சிறிய வழிகாட்டிதான்." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+