இதயம் இல்லாத இயற்கை
-கதிர்வேல்
திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது அவினாசி. அருகே அவினாசிலிங்கம் பாளையம். அங்குள்ள பனியன் கம்பெனி ஓனர் மணி. ஒரே மகன். பெயர் முகில்.
கோவை சூலூரில் உள்ள கேந்த்ரிய வித்யாலயா பள்ளியில் படித்து வந்தான். அருகே உள்ள அப்பம்மா பூவாத்தாள் வீட்டில் தங்கி இருந்தான்.
சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்த காட்சிகளை டீவியில் பார்த்த முகில் மனம் உடைந்து போனான். ஏதாவது உதவி செய்யணும் பாட்டி என்று பூவாத்தாளிடம் புலம்பினான்.

உங்க அப்பாவை கேளுடா, வழி சொல்லுவான் என்றார் பாட்டி. அப்பாவிடம் பேசினான். மகனின் மனிதாபிமானம் அப்பாவின் இதயத்தை தொட்டது. கணிசமான தொகை கொடுத்து என்ன தேவையோ வாங்கி அனுப்பு என்றார்.
அப்பாவும் மகனும் ஏராளமான துணிமணிகளை வாங்கி பார்சல் கட்டினர். வீடு வீடாக சென்று விஷயத்தை சொல்லி ஆடைகள் சேகரித்தனர். அனைத்தையும் நண்பர்களிடம் ஒப்படைத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.
மகன், பேரன் மனதில் பொங்கிய மனிதாபிமானத்தை பார்த்து நெகிழ்ந்த பாட்டி கூடவே இருந்தார். மூன்று பேரும் கோவையில் இருந்து திருப்தியோடு காரில் ஊருக்கு திரும்பினர்.
சென்னையில் இருந்து வந்த அரசு பஸ் மோதி மூவரும் இறந்தனர். ரத்தத்தை சுத்தம் செய்தது மழை.












Click it and Unblock the Notifications