சென்னை ஆளுநர் மாளிகை முன்பு திடீர் போலீஸ் குவிப்பால் பதட்டம்
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வாய்ப்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை, கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வாய்ப்புள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா இன்று முதல்வராக பதவியேற்க கூடும் என தகவல் வெளியாகியிருந்தது. இதற்காக சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா அரங்கில் தீவிர ஏற்பாடுகள் நடந்து வந்தன.
இதனிடையே தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழக பயணத்தை திடீரென ரத்து செய்துவிட்டு மும்பை சென்றுவிட்டார். இதனால் இன்று சசிகலா பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுவது கேள்விக்குறியாகி உள்ளது.
இதையடுத்து சென்னை பல்கலைக் கழக வளாகத்தில் இருந்த போலீஸ் கூடுதல் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் சென்னை, கிண்டியிலுள்ள ஆளுநர் மாளிகையான ‛ராஜ்பவன்' முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர் மாளிகையை முற்றுகையிட வாய்ப்பு உள்ளதாக கிடைத்த தகவலையடுத்து கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.