ஓசூரில் கனமழை... வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தாய் மற்றும் மகள் உயிரிழப்பு !
ஓசூர்: ஓசூரில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய தாய் மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அன்னை சத்யா நகரில் 2 பேர் வெள்ளத்தில் அடித்த செல்லப்பட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். கே.சி.சி.,நகர் மஞ்சுநாத் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக வீடுகளில் மழை நீர் புகுந்துள்ளது. சாலைகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தியேடரப்பள்ளி ஏரியில் நீர் நிரம்பியது. அங்குள்ள தரைப்பாலத்திற்கு மேல் வெள்ளநீர் செல்கிறது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அவ்வை நகரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட தாய் மற்றும் மகள் உயிரிழந்தனர். தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் நீர் புகுந்ததால் குடியிறுப்பு வாசிகள் மாடியில் தஞ்சமடைந்துள்ளனர்.
அவசர உதவி எண்:
ஓசூரில் வெள்ளம் பாதிப்பு குறித்து தெரிவிக்க 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று பொதுமக்களுக்கு கிருஷ்ணகிரி ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications