சென்னையில் விடாது வெளுக்கும் கனமழை- எண்ணூர் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
சென்னையில் கனமழை வெளுத்து வாங்குகிறது. எண்ணூர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
சென்னை: சென்னையில் கனமழை வெளுத்து வாங்குகிறது. கடல் சீற்றமாக இருப்பதால் எண்ணூர் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பல பகுதிகளில் கொட்டி வருகிறது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களிலும் தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் மழை வெளுக்கிறது.

கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் கனமழை நீடிக்கிறது. இம்மாவட்டங்களில் நெடுஞ்சாலைகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் டெல்டா மாவட்டங்களிலும் மழை நீடிக்கிறது. இதனால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சாந்தோம், மயிலாப்பூர், ராயப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, வண்ணாரப்பேட்டை, எண்ணூர் உட்பட சென்னையின் பல இடங்களிலும் கனமழை கொட்டி வருகிறது. கடல் சீற்றமாக இருப்பதால் எண்ணூர் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.












Click it and Unblock the Notifications