For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெளுத்துக்கட்டும் மழை - திருவாரூர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக திருவாரூர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: கனமழை காரணமாக திருவாரூர், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்தத் தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்துள்ளது. இதனால் நவம்பர் 12ஆம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்காலில் கனமழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Heavy rain continues holiday declared to Nagapattinam, Tiruvarur

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக ஓய்ந்திருந்த மழை வெள்ளிக்கிழமை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை முதல் வேளச்சேரி, பள்ளிக்கரணை, துரைப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் சாரல் மழை பெய்தது பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாகை மாவட்டம் தலைஞாயிறு, வேதாரண்யம், சீர்காழி ஆகிய ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
கனமழை காரணமாக வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வாரம் மழையால் பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. அதனை ஈடு செய்வதற்காக சனிக்கிழமையன்று பள்ளிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மீண்டும் மழை பெய்வதால் இன்று நாகை, திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
District collectors declared a holiday for all schools in Nagapattinam, Tiruvarur districts on Saturday due to forecast of heavy rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X