தொடர் மழை: சென்னையில் விமான சேவை பாதிப்பு... வால்பாறையில் 3 வீடுகள் இடிந்து சேதம்
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் பெய்த மழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை முதல் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கன மழையும், ஒரு சில இடங்களில் மழையும் பெய்தது. இரவு முதல் விடிய விடிய தொடர்ந்து மழை பெய்ததால் விமான சேவை பாதிக்கப்பட்டது. விமான நிலைய ஓடுபாதையில் மழை நீர் தேங்கியதால், விமானங்களை குறிப்பிட்ட நேரத்தில் இயக்க முடியவில்லை. மேலும் சென்னைக்கு வரும் விமானங்களும் தரையிரங்க முடியவில்லை. இதனால் விமானங்கள் புறப்படுவதிலும், வருவதிலும் தாமதல் ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளில், மேகமூட்டத்துடன் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் மழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றிரவு முதல் வால்பாறையில் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக வால்பாறையில் 3 வீடுகள் இடிந்து சேதமடைந்தன. அங்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், கனமழை காரணமாக சோலையாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்தது. 160 அடி கொள்ளவு கொண்ட அந்த அணையின் நீர்மட்டம் தற்போது 81.10 அடியாக உள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, வங்கக்கடலில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. நீலகிரி மற்றும் கோவையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் மலைப்பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஆந்திர கடல் பகுதியையொட்டியுள்ள மேற்கு வங்கக் கடலில், காற்று மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications