கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளம் - அணைகளில் நீர்மட்டம் உயர்வு - விவசாயிகள் மகிழ்ச்சி
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
Recommended Video

திருநெல்வேலி: மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டித்தீர்த்தது. குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அணைகளில் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் 500 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.
இதனால் அடுத்த 36 மணி நேரத்துக்கு தென் மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சுமார் 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

கொட்டித்தீர்த்த கனமழை
மேற்குத்தொடர்ச்சி மலை பகுதிகளில் நேற்றிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

குற்றால அருவிகளில் குளிக்கத் தடை
மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவிகளில் வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. வெள்ளம் குறைந்த பின்னர் குளிக்க அனுமதி அளிக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் அருவிகளில் குளிக்க வந்த ஐயப்ப பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதே நேரத்தில் படிகளில் வெள்ள நீர் ஓடிவருவதில் பலரும் குளித்து மகிழ்ந்தனர்.

100 ஆண்டுகள் பழமையான மரம்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காசிநாதர் சாமி கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள 100 ஆண்டிற்கு மேற்பட்ட பழமையான மருத மரம் ஒரு வீட்டின் மேல் விழுந்தது வீடு சேதம்
அடைந்தது. ஆனாலும் உயிர்சேதம் ஏற்படவில்லை.
கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் களக்காடு அருகே உள்ள தலையனையிலும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் மகிழ்ச்சி
பாபநாசம் காரையார் அணையில் நீர் மட்டம் 107.45அடியாக உள்ளது. சேர்வலாறு அணையில் நீர் மட்டம்121.36அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணையில் நீர் மட்டம் 90.25அடியாக உள்ளது. 85 அடி அளவுள்ள கடனாநதி அணையில் நீர்மட்டம் 84 அடியாக உள்ளது. இராம நதி அணையில் நீர்மட்டம் 67.50அடியாக உள்ளது. அணைகளில் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications