கர்நாடகத்தில் தொடர் மழை... மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
கர்நாடக மாநிலத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
சேலம்: கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக அதிக மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர் மட்டம் 55 அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கன மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்பியதால் அங்குள்ள தண்ணீர் மேட்டூரை அடைந்தது.

இதனால் மேட்டூர் அணைக்கு 4,749 கனஅடியாக இருந்த நீர் இருப்பு 6,971 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர் மட்டம் 55 அடியை எட்டியுள்ளது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு போக அணையிலிருந்து வினாடிக்கு 1,300 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications