திண்டுக்கல்லில் 2-வது நாளாக இடி மின்னலுடன் கனமழை
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 2-வது நாளாக இன்று இரவும் கனமழை கொட்டி தீர்த்தது.
தமிழகத்தில் கோடை வெயில் உக்கிரத்தைக் காட்டினாலும் பல இடங்களில் கோடை மழை கொட்டி வருகிறது. திண்டுக்கல்லில் நேற்று இரவு இடி மின்னலுடன் கனமழை கொட்டியது.

இன்று 2-வது நாளாக இரவும் 7 மணியளவில் கனமழை கொட்டியது. இடி மின்னலுடன் மழை பெய்தது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சீசன் காலமான தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால் கொடைக்கானலுக்கு வருகை தந்துள்ள சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications