கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கன மழை.. 30 வருடங்களுக்குப் பிறகு நிரம்பிய ஏரி
Subscribe to Oneindia Tamil
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பெய்த கன மழையால் அந்த நகரிலுள்ள நட்சத்திர ஏரி 30 வருடங்களுக்கு பிறகு நிரம்பியுள்ளது.
நேற்று நண்பகல் முதல் நள்ளிரவு வரை கொடைக்கானலில் மழை கொட்டித் தீர்த்தது. இது 10.7 செ.மீ என்ற அளவுக்கு இருந்தது. இந்த கன மழையால் 30 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானல் நட்சத்திர ஏரி முழுவதும் நிரம்பியது.

பெரியாறு அணை, தேக்கடி, கூடலுார், கொடைக்கானலில் நேற்று முன்தினம் நல்ல மழை பெய்தது. முல்லை பெரியாறு அணைக்கு நீர் வரத்து 447 கன அடியாகவும், வெளியேற்றம் 218 கன அடியாக உள்ளது.
கடந்த 2ம் தேதி பெய்த மழை காரணமாக கொடைக்கானல் மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. பாறைகளும் உருண்டு சாலைகளில் விழுந்தன. அவற்றை அகற்றும் பணி இன்னும் நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications