மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை: மீனாட்சியம்மன் கோவிலுக்குள் புகுந்த மழை நீர்!
மதுரையில் பெய்த கனமழை காரணமாக மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது.
மதுரை: கனமழை காரணமாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வெள்ள நீர் புகுந்ததால் பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளிலும் கனமழை கொட்டி வருகிறது. சென்னை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, அரியலூர் என பல இடங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

மதுரையில் நேற்று இரவு சுமார் 2 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் மதுரையில் முக்கிய பகுதிகளான பெரியார், சிம்மக்கல், கோரிப்பாளையம் ஆகிய பகுதிகளில் மழை நீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடியது.
உலகப்புகழ் வாய்ந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்குள்ளும் மழை நீர் புகுந்தது. கொடி மரம் அமைந்துள்ள மண்டப பகுதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
கோவில் முழுவதும் மழை நீர் புகுந்ததால் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். தொடர்ந்து மழை நீரை வெளியேற்றும் பணி நடக்கிறது.
கோரிப்பாளையம், மாட்டுத்தாவணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இன்றும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications