நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கனமழை: வெப்பம் தணிந்து 'சில்' காற்று.. மக்கள் 'குஷி'!

நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி: நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டடரப் பகுதிகளில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. இதானல் வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இந்தாண்டு பருவமழை பொய்த்து போயுள்ளது. அப்போது முதேலே தமிழகம் முழுவதும் கடுமையான வெயிலும் வறட்சியும் நிலவி வருகிறது. பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

Heavy Rain occurs in Nagercoil and the surrounding area

போதா குறைக்கு தற்போது கோடைக்காலமும் தொடங்கி விட்டதல் வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு வெயில் சுட்டெரித்து வருகிறது. கூடவே அனல்காற்றும் விசுவதால் வாகனங்களில் செல்பவர்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது.

இந்நிலையில் நாகர்கோவிலில் மழை பெய்துள்ளது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருவதார் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+