For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்றும் கனமழை பெய்யும்.. எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் தெரியுமா?

தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாடு முழுக்க தற்போது பல மாநிலங்கள் மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. கேரளா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மழை காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

Heavy rain warning issued for few districts in Tamilnadu

அதிலும் கர்நாடகா, மும்பை, கேரளாவில் மழையால் பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

முக்கியமாக கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த நான்கு நாட்களாக மோசமாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் சேலம், நீலகிரி ஆகிய இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை அடுத்துள்ள பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.கோவை, தேனி, சேலம், நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

அதேபோல் சென்னையில் இன்று மாலைக்கு மேல் மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களிலும் இன்று மாலைக்கு மேல் மழை வேகம் எடுக்க வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

English summary
Heavy rain warning issued for few districts in Tamilnadu today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X