கனமழை... சென்னை, காஞ்சி, கடலூர், புதுவையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் தொடரும் விடுமுறை
சென்னை: வரலாறு காணாத கனமழை வெள்ளத்தில் சிக்கி சிதிலமடைந்து கிடக்கும் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 3 வார காலமாக இடைவிடாமல் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. ஏரி, குளங்கள், கால்வாய்கள் நிரம்பி வெள்ளமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

இதனால் ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது கல்வி நிறுவனங்களையும் பாடாய்படுத்தியுள்ளது. இன்னமும் அதிக கனமழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
RT YuvaiTV: Army flood relief and rescue operations, in Chennai. #ChennaiFloods pic.twitter.com/luTSCKTi9w
— DilseNaMo (@DilseNaMo) December 2, 2015 கடந்த 3 வார காலமாக வட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. நாளையும் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
A few people just refused to leave their homes despite severe flooding at Shollinganallur areas #Chennairains pic.twitter.com/7rGaibrPQL
— Shreesha Reddy (@shreeshareddy) December 2, 2015 இதேபோல் புதுச்சேரியிலும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
National Rescue Team start to Chennai.. Ppls plz co-operate them.🙏#chennairains #ChennaiFloods #ChennaiRainsHelp pic.twitter.com/L1dyi4mRCT
— அருண்காந்த்*™ (@iamHarunKanth) December 2, 2015 











Click it and Unblock the Notifications