காணும் பொங்கல்: மெரீனாவில் 12000 போலீசார் குவிப்பு- பழவேற்காட்டில் படகு சவாரிக்கு தடை
சென்னை: காணும் பொங்கல் நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி மெரினாவில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பழவேற்காடு ஏரியிலும் 1 லட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் கூடுவார்கள் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.
காணும் பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, சென்னை மெரீனா, பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பழவேற்காடு ஏரியில் படகு கவிழ்ந்ததில் ஏற்பட்ட உயிரிழப்பு காரணமாக படகு சவாரிக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந்த ஆண்டும் இந்த தடை நீடிக்கிறது. அங்கு சிந்தாமணிஸ்வரர் கோவிலுக்கு படகு மூலம் செல்ல சிலர் முயற்சி மேற்கொள்வார்கள் என்பதால் காணும் பொங்கலையொட்டி படகில் செல்ல மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பழவேற்காடு கலங்கரை விளக்கம் பகுதியில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர் கூடுவார்கள் என்பதால் அங்கும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மதுபாட்டில்களுடன் வருபவர்களை தடுக்கவும், போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதற்காக 5 இடங்களில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் பொன்னேரி டி.எஸ்.பி. எட்வர்டு மற்றும் பன்னீர் செல்வம், இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், முருகன், பழனி, ரமேஷ் உள்பட 500-க்கும் மேற்பட்ட போலீசாரும் ஆயுதபடை போலீசாரும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
செவ்வாய்கிழமையன்று நடைபெற்ற சோதனையில் 500-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பிடிபட்டதாக டி.எஸ்.பி. எட்வர்டு தெரிவித்தார். கடலில் பொது மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
காணும் பொங்கலையொட்டி பொது மக்களுக்காக பழவேற்காடு பகுதி முழுவதும் அனைத்து பாதுகாப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் டி.எஸ்.பி. எட்வர்டு தெரிவித்தார். எனவே போலீசாருக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு தருவதுடன் காணும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாட வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications