பக்கத்து வீட்டுக்காரர் அடித்ததால் சோகம்... 61 வயது தாத்தா தூக்கிட்டுத் தற்கொலை
சென்னை: பக்கத்து வீட்டுக்காரரின் தொடர் தாக்குதலால் மனமுடைந்த 61 வயது முதியவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சேலையூர் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.
சென்னை சேலையூர் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பசாமி (61). தச்சுத் தொழிலாளியான இவர் சமீபத்தில் தனது வீட்டில் குடியிருந்த ஒரு குடித்தனத்தை காலி செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகத் தெரிகிறது. இதற்கு அதே பகுதியில் வசித்து வந்த யுவராஜ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருப்பசாமிக்கும், யுவராஜுக்கும் இடையில் இது தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று கருப்பசாமியை தெருவில் வைத்து தாக்கியுள்ளார் யுவராஜ். இத்தாக்குதல் தொடர்பாக சேலையூர் போலீசில் புகார் அளித்துள்ளார் கருப்பசாமி. ஆனால், யுவராஜ் மீது போலீசார் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், தன் மீது புகார் அளித்ததற்காக கருப்பசாமியை மிரட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த கருப்பசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப் பட்டுள்ளது.
போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததே கருப்பசாமியின் மரணத்திற்குக் காரணம் எனக் கூறி, மாடம்பாக்கம் சாலையில் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேலையூர் இன்ஸ்பெக்டர் குணவர்மன் தலைமையிலான போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி அவர்களை சமாதானப் படுத்தினார்கள்.
இது தொடர்பாக சேலையூர் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு விசாரணை செய்து வருகின்றனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications