மீண்டும் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளை! ரூ.2 க்கு 1 யூனிட் மின்சாரம் தருகிறாராம்!!

Subscribe to Oneindia Tamil

Herbal fuel man back, plans to sell Power for Rs 2/Unit
சென்னை: தமிழக அரசு அனுமதி அளித்தால் தமிழகத்தின் மின்சாரப்பற்றாக்குறையை 6 மாதத்தில் நீக்குவேன் என்று மூலிகைப் பெட்ரோல் புகழ் ராமர் பிள்ளை கூறியுள்ளார்.

என் மீது கருணை கொண்டு அனுமதி வழங்கினால் தினமும் 10 ஆயிரம் லிட்டர் மூலிகை பெட்ரோல் மற்றும் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று உறுதி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ராமர்பிள்ளை கூறியதாவது:

என்னால் கண்டுபிடிக்கப்பட்ட மூலிகை பெட்ரோல் புதுமையானது, சுற்றுப்புற சூழலை பாதுகாக்கக் கூடிய எரிபொருள் என்றும் உலக காப்புரிமை மையம், அமெரிக்கா, சிங்கப்பூர், டென்மார்க், மலேசியா போன்ற நாடுகளில் சான்றிதழ் பெற்றுள்ளேன்.

மேலும் 1996ம் ஆண்டில் சென்னை ஐஐடி மற்றும் டேராடூனில் உள்ள ஐஐபி போன்ற பரிசோதனை சாலையில் நடைபெற்ற சோதனையில் நான் தவறு ஏதும் செய்யவில்லை என்று நான் சேகரித்து வைத்துள்ள சான்றிதழ்கள் கூறுகிறது.

தற்போது நான் ரூபாய் 20 லட்சம் செலவில் மூலகை பெட்ரோல் தயாரிக்கும் இயந்திரங்கள் நிறுவி உள்ளேன். இதன் மூலம் தினமும் 10 ஆயிரம் லிட்டர் மூலிகை எரிபொருள் உற்பத்தி செய்ய இயலும்.

தமிழக அரசு என் மீது கருணைகொண்டு அனுமதி வழங்கும்பட்சத்தில் இதனை பயன்படுத்தி சுமார் 6 மாத காலத்திற்குள் மின்சாரம் தயார் செய்து குறைந்த விலையில் (1 யூனிட் ரூபாய் 2க்கு) தமிழக மக்களுக்கு வழங்கி மின்சார பற்றாக்குறையை போக்க முடியும் என உறுதி கூறுகிறேன் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+