தனி நபர் அந்தரங்கத் தகவல்களை புட்டு புட்டு வைக்கும் ஆதார்... அதுதான் சிக்கலே! #Aadhar
தனி நபர் குறித்த அத்தனை விஷயங்களும் ஆதார் அட்டையில் இடம்பெறுவதாலேயே அதனை கட்டாயமாக்குவதை மக்கள் எதிர்க்கின்றனர்.
சென்னை : ஆதார் எண் தனி மனித அடையாளத்திற்காக எடுக்கப்படுவதாக அறிவித்துவிட்டு தற்போது எல்லா திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயம் என்ற நிலை கொண்டு வரப்பட்டுவிட்டது, தனி நபர் குறித்த அனைத்து விவரங்களும் இதில் இடம்பெற்றிருப்பதாலேயே இதனை கட்டாயப்படுத்துவதை மக்கள் எதிர்க்கின்றனர்.
இந்தியாவில் இருக்கும் எவரும் இனி ஆதார் இல்லாமல் இருக்க முடியாது என்று நினைக்கும் அளவிற்கு இந்த ஆதார் அட்டையை கட்டாயமாக்கி மக்களுக்கு நெருக்கடி தந்தது மத்திய அரசு.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் திட்டமிடப்பட்ட இந்த ஆதார் அட்டை கட்டாயமாக்கும் திட்டம், தற்போது தேசிய ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

தனக்கான அடையாளத்தை பெறுவதற்கான எண்
ஆதார் அட்டை என்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தனக்கான அடையாளத்தை பெறுவதற்கான எண் கொண்டது மட்டுமே என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் ஆதார் அட்டைக்காக பதிவு செய்யும் போது தனி நபரின் விழிப்படலம், கைவிரல் ரேகை என்று அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படுகிறது.

ஏன் அவசியம்?
0 வயது முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கூட இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு ஆதார் அட்டை வழங்கப்படுகிறது. ஆதார் என்பது வெறும் அடையாள அட்டை என்பதைத் தாண்டி குடிமகன் பெறும் அனைத்து அரசு உதவிகள், மானியத்திற்கும் இது அவசியமாக்கப்பட்டது.

தனி நபர் சுதந்திரம் எங்கே?
கேஸ் மானியம் பெற, வங்கி எண்ணுடன் ஆதார் இணைக்க வேண்டும் என்று தொடங்கி ஆதாரை கட்டாயமாக்கும் பணி தற்போது, ரேஷன் மானியம் பெற ஆதார் எண் இணைப்பு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஆதார் எண் என்று எல்லாம் ஆதார் மயமாகிவிட்டது. அரசு அல்லது நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் அடையாள அட்டைகள் அவர்களை அடையாளம் காண்பதற்காக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர அதில் தனி நபரை நோட்டமிடும் விவகாரங்கள் இருக்கக் கூடாது என்பதே மக்களின் கருத்து

கொந்தளிக்கும் மக்கள்
ஆதார் எண் என்ற ஒன்று மட்டும் இருந்து விட்டால் போதும், தனி நபரின் அனைத்து பணப் பரிமாற்றங்களையும் எங்கிருந்தோ யாரோ ஒருவர் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்பது தான் உறுத்தலான விஷயம் என்று கொந்தளிக்கின்றனர் மக்கள். அதுமட்டுமின்றி தனி நபரின் சுதந்திரம் என்பது இதில் எங்கே இருக்கிறது. சுதந்திர நாட்டிலும் கூட சுதந்திரமில்லாத நிலையில் வாழவேண்டியுள்ளது என்பதே மக்கள் ஆதார் அட்டையை திட்டங்களுக்கு கட்டாயமாக்குவதை எதிர்ப்பதற்கான காரணமாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications