90 நாட்கள் கோரியதற்கு ஒருநாள் மட்டும் அனுமதியா? நாளை போராட்டம் நடத்தப்போவதில்லை -அய்யாகண்ணு
சென்னையில் ஒருநாள் போராட்டம் நடத்தப்போவதில்லை என அய்யாக்கண்ணு தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: காவிரி வாரியம் அமைக்க கோரி சென்னை மெரினாவில் நாளை ஒருநாள் மட்டும் போராட்டம் நடத்த அய்யாக்கண்ணுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஆனால் 90 நாள் கோரியதற்கு 1 நாள் மட்டும் அனுமதி கொடுத்தது சரியல்ல என்றும், அதனால் நாளை மெரினாவில் போராட்டம் நடத்தப்போவதில்லை என்றும் அய்யாக்கண்ணு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை மத்திய அரசு செயல்படுத்தவில்லை என கூறி தமிழகத்தில் பல போராட்டங்களை அய்யாக்கண்ணு முன்னெடுத்துச் சென்று வருகிறார்.அதன்படி காவிரி வாரியம் கோரி மெரினாவில் 90 நாட்கள் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்றத்தில் அய்யாக்கண்ணு அனுமதி கோரி வழக்கு தொடுத்திருந்தார். அந்த வழக்கானது கடந்த 12-ம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், 90 நாட்கள் போராட்டத்திற்கெல்லாம் அனுமதி தர இயலாது என்றும், டெல்லியில் நடத்தியது போன்று அரை நிர்வாண போராட்டங்களில் ஈடுபட கூடாது, ஏனெனில் மெரினா கடற்கரை பொதுமக்கள் வரும் இடம் என்றும் தெரிவித்திருந்தனர். அதேபோல, காவிரியைவிட மெரினா கடற்கரைதான் முக்கியமா எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
இந்நிலையில், 90 நாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், சென்னை மெரீனா கடற்கரையில் காவிரிக்காக ஒரு நாள் மட்டும் அய்யாக்கண்ணு உண்ணாவிரத போராட்டம் நடத்த தமிழக அரசு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, 90 நாட்கள் கோரியதற்கு ஒருநாள் மட்டும் அனுமதித்தது சரியல்ல என்று அய்யாகண்ணு தெரிவித்துள்ளார். இதனால் சென்னை மெரினாவில் நாளை போராட்டம் நடத்த போவது இல்லை என்றும், மெரினாவில் தொடர் போராட்டத்துக்கு அனுமதி கேட்டு மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications