ஜாலியன் வாலாபாக் போன்ற துப்பாக்கிச் சூடு தமிழகத்துக்கு கரும்புள்ளி.. விளாசி தள்ளிய நீதிபதிகள்!
ஜாலியன் வாலாபாக் போன்ற தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தமிழகத்துக்கு கரும்புள்ளி என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Recommended Video

மதுரை: ஜாலியன் வாலாபாக் போன்ற தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தமிழகத்துக்கு கரும்புள்ளி என மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதில் வன்முறை வெடித்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

தொடர்ந்து 2 நாட்கள் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர்.இதுதொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் 8 பேர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தூத்துக்குடியை சேர்ந்த ஹென்றி தாமஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளையும் பறிமுதல் செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் செல்வம், பசீர் ஆகியோர் ஜாலியன் வாலாபாக் போன்ற தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தமிழகத்துக்கு கரும்புள்ளி என கருத்து தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications