ஹைகோர்ட் தலைமை நீதிபதி விசாரணை அறையில் போராட்டம் நடத்திய 10 பேருக்கும் ஜாமீன்
சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கெளல் விசாரணை அறையில் போராட்டம் நடத்திய 10 பேருக்கும் ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மாதம் 14ம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் விசாரணை அறையில் வக்கீல்கள் சிலர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் வாயில் கருப்புத் துணியைக் கட்டி அவர்கள் போராடினர்.
இதுகுறித்து உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், எஸ்பிளனேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 8 வழக்கறிஞர்கள் மற்றும் 2 சட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 10 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த மாதம் இந்த மனு நீதிபதி ஆதிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, கைதானவர்கள் 10 பேருக்கும் ஜாமீன் வழங்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஜாமீன் வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர். அதனை விசாரித்த எஸ்.வைத்தியநாதன், இன்று 10 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications