தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. தனிநபர் விசாரணை ஆணையத்துக்கு தடையில்லை உயர் நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக விசாரணை நடத்தும் தனிநபர் ஆணையத்துக்கு தடையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின்போது, நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தனி நபர் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு தடையில்லை என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 22 ஆம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100வது நாள் போராட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 20,000 க்கும் மேற்பட்ட மக்கள் மாட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். அப்போது போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து, விசாரணை நடத்துவதற்கு, தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் தனி நபர் விசாரணை ஆணையம் அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட்டது. இந்த தனி நபர் விசாரணை ஆணையத்திற்கு எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் தமிழக அரசு அறிவித்த தனி நபர் ஆணையம் விசாரணை நடத்துவதற்கு தடைகோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவின் மீதான விசாரணை இன்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்றது. அந்த மனுவில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக தனி நபர் விசாரணை ஆணையம் அமைத்த தமிழக அரசின் அரசாணையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையால் நடந்த துப்பாக்கிச்சூடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு, தனிநபர் விசாரணை ஆணையம் விசாரணை நடத்துவதற்கு முன்பாக, அரசே முன்முடிவோடு இந்த அரசாணையை வெளியிட்டுள்ளது. அதனால், ஆணையத்தின் விசாரணை நியாயமாக நடைபெறாது என்பதால், இந்த ஆணையத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அர்ஜுனன் மனுவை விசாரித்த நீதிபதிகள், தனிநபர் விசாரணைக்கு தடைவிதிக்க முடியாது என்றும், இந்த விசாரணை குறித்து அரசே முன்முடிவு எடுக்க முடியுமா என்பது குறித்து தமிழக அரசு வழக்கறிஞர் தெளிவுபடுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications