ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கு… உச்ச நீதிமன்றத்தை நாட ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமாரின் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவர் இருக்க வேண்டும் என்ற தந்தை பரமசிவத்தின் கோரிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை அணுக சென்னை ஹைகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் மின் கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் ஒருவரும் இருக்க வேண்டும் என்று அவரது தந்தை பரமசிவம் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இரண்டு பேர் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த அமர்வில் இருந்த நீதிபதி குலுவாடி ரமேஷ் தனியார் மருத்துவரை வைத்து கொள்ளலாம் என்று கூறினார். அதற்கு நீதிபதி வைத்தியநாதன் மறுப்பு தெரிவித்தார். இரண்டு நீதிபதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் இந்த வழக்கு 3வது நீதிபதியிடம் சென்றது.

சென்னை ஹைகோர்ட்டின் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் 3வது நீதிபதியாக கிருபாகரனை நியமித்தார். ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கை விசாரித்த 3வது நீதிபதி கிருபாகரன் எய்ம்ஸ் மருத்துவரை பிரேத பரிசோதனையின் போது வைத்துக் கொள்ளலாம் என்றும் செப். 27ம் தேதிக்குள் பிரேத பரிசோதனையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இதனை ஏற்க மறுத்த ராம்குமாரின் தந்தை பரமசிவமும், வழக்கறிஞர் சங்கர சுப்பும் இன்று தலைமை நீதிபதி எஸ்.கே கவுலிடம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரி மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, ராம்குமார் பிரேத பரிசோதனை தொடர்பாக 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்க முடியாது என்றும், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ராம்குமாரின் உடலைப் பாதுகாக்க வேறு அமர்வில் முறையிடுமாறும் ராம்குமார் தந்தைக்கு அறிவுரை வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம்.
சந்தேகத்திற்குரிய மரணங்களின் பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் ஒருவர் இருக்கலாம் என்று உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. இது ஒரு சாதாரண கோரிக்கைதான். இருந்தபோதும் சாதாரண மனிதர் பரமசிவம் ஏன் இப்படி அலையவிடப்படுகிறாரோ?
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications