என்ன நடக்கிறது தமிழகத்தில்.. நாள் முழுக்க அடுத்தடுத்து நடந்த பரபரப்பு அரசியல் நிகழ்வுகள்
Recommended Video

சென்னை: தமிழகத்தில் காலை முதல் மாலை வரை அடுத்தடுத்து அரசியல் சார்பான நிகழ்வுகள் பலவும் அரங்கேறி பரபரப்பை கூட்டியுள்ளன.
இன்று காலை திடீரென மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை அவர் இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த ஆலோசனைக்கு பிறகு, பொன்.ராதாகிருஷ்ணன் திடீரென ஆளுநர் மாளிகை சென்றார்.
ஆளுநர் மாளிகையில் அவர், ஆளுநர், பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசித்தார்.

ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு
இந்த சந்திப்புகள் நிகழ்ந்த சில நிமிடங்கள் கழித்து, முதல்வர் அலுவலகத்தில் இருந்து ஒரு தகவல் வந்தது. அதில், முதல்வர் இன்று இரவு 7 மணிக்கு ஆளுநரை ராஜ்பவனில் வைத்து சந்திக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும், எதற்காக இந்த சந்திப்பு என்பது தெரிவிக்கப்படவில்லை. பொன்.ராதாகிருஷ்ணன் முதல்வருடன் சந்தித்தது, பிறகு ஆளுநரை சந்தித்ததையடுத்து, முதல்வரும் ஆளுநரை சந்திக்க முடிவு செய்துள்ளது ஏன் என்று தெரியவில்லை.

பிரதமருடனும் சந்திப்பு
இந்த நிலையில், அடுத்த சில நிமிடங்களில் மற்றொரு தகவலும் வெளியானது. அந்த தகவல் இதுதான்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார் என்பதுதான் அந்த தகவல். எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் அமைப்பது தொடர்பாக மோடியிடம் எடப்பாடி பேசுவார் என்று தகவல்கள் கூறப்பட்டாலும், அடுத்தடுத்து ஏன் இந்த முடிவுகள் வந்த வண்ணம் உள்ளன என்ற கேள்வியும் எழுகிறது.

தினகரன் தரப்பு
இதெல்லாம் ஆளும் தரப்பில் நடந்த நிகழ்வுகள் என்றால், டிடிவி தினகரன் இன்று தனது வீட்டில் பேட்டியளித்தபோது, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன்னை சந்தித்து, எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இருந்து அகற்ற கோரியதாக தெரிவித்தார். மறுபக்கம் அமைச்சர் தங்கமணி, தினகரன்தான், அதிமுகவுடன் இணைய தூதுவிட்டார் என்று பதிலடியாக தெரிவித்தார்.

என்ன காரணம்
அடுத்ததாக டிடிவி தினகரன் திடீரென, பெங்களூரிலுள்ள சசிகலாவை சந்திக்க கிளம்பி சென்றுவிட்டார். மாலை 6.30 மணிக்கு ஓ.பன்னீர் செல்வம் பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இரவு, ஆளுநருடன் முதல்வர் திடீரென சந்திக்க உள்ளதற்கான காரணம், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் வெளியாகும் தீர்ப்பு தொடர்பானதா, பன்னீர்செல்வம் தொடர்பாக தினகரன் தரப்பினர் வெளியிட்டு வரும் தகவல் காரணமாகவா, கருணாஸ் உள்ளிட்ட அதிருப்தி எம்எல்ஏக்கள் மீதான புதிய நடவடிக்கை தொடர்பானதா, என்பதெல்லாம் யூகங்களாக றெக்கை கட்டி பரவி வருகிறது. காலை முதல் தொடரும் இந்த பரபரப்பு மாற்றங்கள் தமிழகத்தில் அரங்கேறியுள்ளன.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
ரவிக்குமார் என்ன இப்படி சொல்லிட்டாரே? அமித்ஷா விசிகவை குறி வைக்கிறாரா? டெல்லிக்கு பறந்த தகவல் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications