அதிக கட்டணம்... சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளி முற்றுகை
Subscribe to Oneindia Tamil
சென்னை: அதிக கட்டணம் வசூலிப்பதாக சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள என்சிசி கேம்ப் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் வழக்கம் போல் திறந்தன. இந்நிலையில் கிழக்கு தாம்பரத்தில் என்.சி.சி. கேம்ப் என்ற தனியார் பள்ளி உள்ளது. இங்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

இதைத் தொடர்ந்து பெற்றோர் அப்பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.
தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுக்கவே பள்ளிக் கல்வித் துறை சார்பில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றனர். அவற்றுள் பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் கிரேடு முறை ஒழிக்கப்பட்டது குறிப்பிடக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications