ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களுக்கு எதிரான 173 வழக்குகள் தள்ளுபடி.. ஹைகோர்ட் அதிரடி
Recommended Video

மதுரை: ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான 173 வழக்குகளை ஒரே வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மே மாதம் 22ம் தேதி நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பான ஒரே சம்பவத்துக்கு 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தவறு என்று, வழக்கறிஞர் ஜான் வின்சென்ட் மதுரை ஹைகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

முதல் வழக்குடன், மற்ற குற்றச்சாட்டுகளை வாக்குமூலமாக சேர்த்து ஒரே வழக்காக பதிவு செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிடக் கோரியிருந்தார்.
இதை ஏற்று இன்று தீர்ப்பளித்துள்ள ஹைகோர்ட், 173 வழக்குகளை தள்ளுபடி செய்துவிட்டு, அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களுக்கு நிம்மதி கிடைத்துள்ளது. அடிக்கடி அலைச்சல், பண விரையம் தவிர்க்கப்படும் என்று அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மே 22ம் தேதி போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications