பாக். பள்ளித் தாக்குதல் எதிரொலி: தமிழக பள்ளிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சென்னை: பாகிஸ்தான் ராணுவ பள்ளி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 141 பேர் படுகொலை செய்யப்பட்டதின் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ராணுவத்தினர் நடத்தி வரும் பள்ளி ஒன்றில் நேற்று முன்தினம் புகுந்த தாலிபான் தீவிரவாதிகள் 6 பேர், அங்கிருந்த மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர். இதில், அப்பள்ளிக்கூட மாணவர்கள் 132 பேர் உட்பட 141 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்நிலையில், பாகிஸ்தானில் நடந்துள்ள தாக்குதலை தொடர்ந்து இந்தியா மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக மத்திய உளவுத்துறை மாநில உளவுத்துறைக்கு வாய்மொழி எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து அனைத்து மாநில போலீசாரும் பாதுகாப்பு ஏற்பாட்டை தீவிரப்படுத்தி உள்ளனர்.
தமிழகத்தை பொருத்தவரை போலீஸ் டிஜிபி அசோக்குமார் உத்தரவுப்படி அனைத்து மாவட்ட போலீசாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். போலீஸ் கமிஷனர்கள், மாவட்ட எஸ்பிக்களும் பாதுகாப்பு பணியை நேரடியாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னையை பொருத்தவரை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களான வணிக வளாகங்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ரயில்-பஸ்-விமான நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் கட்டுப்பாட்டு அறை மூலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சந்தேகத்திற்குரிய வகையில் நடமாடும் நபர்கள் குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், பள்ளி, கல்லூரிகளும் பாதுகாப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டுள்ளது. அங்கும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
-
வெறும் 1 மணி நேரம்.. ஒட்டுமொத்த சிபிஎஸ்இ சிஸ்டமும் ஹேக்.. அம்பலப்படுத்திய 19 வயது இளைஞர் -
"ரோல் நம்பர் என்னுடையது.. ஆனா பேப்பர் வேறொருவருடையது!" CBSE விடைத்தாள் நகலை பார்த்து உறைந்த மாணவன் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications