சட்டசபை வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு… கமிஷனர் ஜார்ஜ் நேரில் ஆய்வு
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தனது பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளது. இதனால் சட்டசபை வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை: 29 ஆண்டுகளுக்கு பின்னர், தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த பரபரப்பான சூழலில் அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடாமல் இருக்க 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபைக்கு வந்துள்ளனர். திமுக எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களும் சட்டசபைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இன்று சட்டசபையில் 11 மணிக்கு என்ன நடக்கும் என்ற பதற்றம் எல்லோரையும் தொற்றிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கவும் பாதுகாப்பு அளிக்கவும் தலைமை செயலகத்தைச் சுற்றி சுமார் 1600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் 10 வாயில்களில் உள்ளன. அவை அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களது கார் ஓட்டுனர் மட்டுமே கோட்டைக்குள் வர அனுமதி அளிக்கப்படுகிறது.
சட்டசபைக்கு போடப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்து சென்னை கமிஷனர் ஜார்ஜ் நேரில் பார்வையிட்டு உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications