சட்டசபை வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு… கமிஷனர் ஜார்ஜ் நேரில் ஆய்வு
சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான தனது பலத்தை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளது. இதனால் சட்டசபை வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை: 29 ஆண்டுகளுக்கு பின்னர், தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த பரபரப்பான சூழலில் அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடாமல் இருக்க 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டசபைக்கு வந்துள்ளனர். திமுக எம்எல்ஏக்கள் தலைமைச் செயலகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். ஓபிஎஸ் அணி எம்எல்ஏக்களும் சட்டசபைக்கு வந்து கொண்டிருக்கின்றனர். இன்று சட்டசபையில் 11 மணிக்கு என்ன நடக்கும் என்ற பதற்றம் எல்லோரையும் தொற்றிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்கவும் பாதுகாப்பு அளிக்கவும் தலைமை செயலகத்தைச் சுற்றி சுமார் 1600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தலைமை செயலகத்தில் 10 வாயில்களில் உள்ளன. அவை அனைத்திலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். எம்எல்ஏக்கள் மற்றும் அவர்களது கார் ஓட்டுனர் மட்டுமே கோட்டைக்குள் வர அனுமதி அளிக்கப்படுகிறது.
சட்டசபைக்கு போடப்பட்டுள்ள பாதுகாப்புகள் குறித்து சென்னை கமிஷனர் ஜார்ஜ் நேரில் பார்வையிட்டு உயர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications