எச். ராஜா இப்படியா பேசுவது.. கொதிக்கும் இந்து அறநிலைய ஊழியர்கள்.. உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
Recommended Video
ஈரோடு: பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வேடசந்தூரில் இந்து அறநிலைய துறையில் பணிபுரியும் பெண்கள் பற்றி இழிவாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களை சிறப்பாக பராமரிப்பதில்லை என்று ராஜா நீண்ட காலமாக குற்றம்சாட்டி வருகிறார். இதுகுறித்து வேடசந்தூரில் பேசுகையில், அறநிலையத்துறை ஊழியர்களின் குடும்ப பெண்கள் குறித்து தரக்குறைவான வார்த்தைகளால் விமர்சனம் செய்து, ராஜா பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஈரோட்டில் இந்து அறநிலைய துறை பணியாளர்கள் அலுவலகத்தை பூட்டி இன்று புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே, அறநிலையத்துறை ஊழியர்களை அவதூறாக பேசிய ஹெச்.ராஜாவை கண்டித்து வரும் 27ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக, புதுக்கோட்டையில் அறநிலையத்துறை ஊழியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாரதி இன்று அளித்த பேட்டியில் தெரிவித்தார்.