இன்னொரு அயோத்தியா மதுரா? மசூதியில் அனுமன் பஜனை நடத்துவதாக இந்துத்துவா அமைப்புகள் எச்சரிக்கை-பதற்றம்
மதுரா: உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் சர்ச்சைக்குரிய மசூதிக்குள் நுழைந்து வழிபாடு நடத்தப் போவதாக இந்துத்துவா அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருப்பதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. மதுராவில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோவில் உள்ளது. இங்கு பழைய கிருஷ்ணர் கோவில் இடிக்கப்பட்டு 1662-ல்

ஈத்கா மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த் மசூதியை அகற்றி அந்த நிலத்தை மதுரா கோவிலுக்கு தர வேண்டும் என்பது இந்துத்துவா அமைப்புகள் கோரிக்கை. இது தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன.
உத்தரப்பிரதேசத்தின் அயோத்தி ராமர் பிறந்த இடம்; அங்கே பாபர் மசூதி கட்டப்பட்டதாக இந்துத்துவா அமைப்பினர் கூறினர். பின்னர் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதியை இந்துத்துவா அமைப்பினர் இடித்து தரைமட்டமாக்கினர். இதனால் நாடு முழுவதும் மதவன்முறைகள் வெடித்தன. அயோத்தி, மதுரா விவகாரங்கள் ஒரே மாதிரியானவை. ஆங்கிலேயர் காலத்தில் இருந்தே கோவில், மசூதி நிலம் தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. இதேபோல் காசி விஸ்வநாதர் கோவிலை ஒட்டிய ஞானவாபி மசூதியும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறது.
இது தொடர்பான வழக்குகளில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடம் இந்துக்களுக்கு வழங்க உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதனடிப்படையில் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. அயோத்தி விவகாரத்தைப் போல மதுரா, காசி மசூதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என இந்துத்துவா தரப்பு முயற்சிக்கிறது.
இதன் ஒரு பகுதியாக பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளான இன்று டிசம்பர் 6-ல் மதுராவில் சர்ச்சைக்குரிய ஈத்கா மசூதிக்குள் நுழைந்து அனுமன் பஜனையை பாடுவோம் என அகில பாரத இந்து மகாசபை அறிவித்தது. இதனால் மதுராவில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மதுரா நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மதுராவில் 1,000க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டும் அகில பாரத இந்து மகாசபை இதேபோல மதுரா ஈத்கா மசூதியை குறிவைத்து போராட்டத்தை முன்னெடுத்தது. ஆனால் மதுரா மாவட்ட நிர்வாகம் இந்த முயற்சியை தடுத்து நிறுத்தியது. இந்த ஆண்டும் அதேபோல அறிவிப்பு வெளியிடப்பட்டிருப்பதால் மதுராவில் பதற்றம் தொடருகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications