கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி பிரமுகருக்கு கத்திக்குத்து... மர்ம நபரை தேடுகிறது போலீஸ்!

கும்பகோணம் அருகே இந்து மக்கள் கட்சி பிரமுகரை கத்தியால் குத்திய மர்ம நபரைபோலீசார் தேடி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம் : கொரநாட்டு கருப்பூரில் இந்து மக்கள் கட்சி பிரமுகரை கத்தியால்
குத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கும்பகோணம் அருகே கொரநாட்டு கருப்பூரில் இந்து மக்கள் கட்சியின் பிரமுகர்
கணேஷ்குமார் என்பவர் மர்மநபர்களால் தாக்கப்பட்டார். மர்ம நபரை கணேஷ்குமாரை
கத்தியால் குத்தியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். அலறல் சத்தம் கேட்டு
அக்கம்பக்கத்தினர் வந்து கணேஷ்குமாரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Hindu Makkal Katchi member attacked near Kumbakonam

ஆனால் பொதுமக்கள் கூடத் தொடங்கியது கத்தியால் குத்திய நபர் தப்பி ஓடியதாக
தெரிகிறது. இதனால் அந்த மர்ம நபரை யாரும் அடையாளம் காண முடியவில்லை.
இந்நிலையில் கணேஷ்குமாரை தாக்கியது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர். கட்சியில் முன்விரோதம் அல்லது குடும்பப் பகை உள்ளிட்ட ஏதேனும்
காரணங்கள் இதன் பின்னணியில் உள்ளனவா என்று போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணேஷ்குமார் கூறும்
அடையாளங்களை பொருத்தே மர்ம நபரை பிடிக்கலாம் என்று போலீசார் காத்திருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+