திருப்பூரில் இந்து அமைப்பு நிர்வாகி கார் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூர் அருகே இந்து அமைப்பு நிர்வாகியின் கார் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் முதலிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் கோபிநாத். இவர், இந்து முன்னேற்ற கழகம் என்ற அமைப்பின் மாநில தலைவராக உள்ளார். இந்த நிலையில், இவர் தனது காரில் திருப்பூரில் இருந்து வெள்ளக்கோவில் நோக்கி காரில் சென்றுள்ளார்.

Hindu party leader car attacked with petrol bomb in tripur

அப்போது திருப்பூரை அடுத்த முதலிப்பாளையம் பகுதியில் கோபிநாத் காரில் சென்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த அடையாளம் தெரியாத இருவர், கார் மீது பெட்ரோல் குண்டை வீசியதாக கூறப்படுகிறது.

இதில், காரின் கதவுகள் எரிந்து சேதமடைந்தது. எனினும், எவ்வித காயமும் இன்றி கோபிநாத் உயிர் தப்பினார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+