பாஜகவின் ஆன்மீக கொள்கையை பின்பற்றுகிறது அதிமுக.. தமிழிசை புகழாரம்
ஜெயலலிதா மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூறுவது கடமையாகும். அதே நேரம் மருத்துவ சிகிச்சை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புவது சரியல்ல என்பதையும் க
மதுரை: பாஜகவின் ஆன்மீக கொள்கையை அடியொற்றி அதிமுக செயல்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மதுரையில் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னையில் வர்தா புயல் பாதிப்பை தமிழக அரசு எதிர்கொண்ட விதம் பாராட்டுக்குரியது.

புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் மரங்கள் வேரோடு சாய்ந்து விட்டன. இதற்கு மாற்றாக பாஜக சார்பில் 2 லட்சம் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம்.
ஜல்லிக்கட்டு நடத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இதுதொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு சார்பில் அழுத்தமான வாதத்தை முன்வைத்துள்ளது. ஆகவே கோர்ட்டில் சாதகமான தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கலாம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதில் கூறுவது கடமையாகும். அதே நேரம் மருத்துவ சிகிச்சை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புவது சரியல்ல என்பதையும் கவனிக்க வேண்டும்.
தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் நடவடிக்கைகள் சிறப்பாக இருக்கிறது. பாஜகவின் ஆன்மீக கொள்கையை அடியொற்றி அதிமுக செயல்படுகிறது. இருப்பினும், கொள்கை அடிப்படையில் அக்கட்சியோடு கூட்டணி வைப்பது குறித்து இப்போது கூற முடியாது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications