தொடரும் கனமழை: திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
கனமழை தொடருவதால் திருவாரூரில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கனமழை தொடருவதால் திருவாரூரில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும்போது வெளுத்து வாங்கியது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் 10 நாட்கள் இடைவிடாது மழை கொட்டித் தீர்த்தது.

கடந்த சில நாட்களாக ஓய்வெடுத்த மழை நேற்று முதல் வெளுத்து வாங்க தொடங்கிவிட்டது. கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications