கன்னியாகுமரி: இனயம் சரக்கு பெட்டக முனையத்துக்கு எதிராக 48 கிராம மக்கள் மனித சங்கிலி
இனயம் சரக்கு பெட்டக முனையத்துக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தின் 48 கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்: இனயம் சரக்கு பெட்டக முனையத்துக்கு எதிராக கன்னியாகுமரி மாவட்டத்தின் 48 கிராம மக்கள் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தினர்.
இனயம் சரக்கு பெட்டக முனையம் அமைந்தால் 12 கி.மீ சுற்றளவிலான கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்படும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இதனால் இனயம் சரக்கு பெட்டக முனையத்தை அமைக்க கூடாது என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரியின் நீரோடியில் மனித சங்கிலிப் போராட்டம் இன்று நடைபெற்றது. நெய்தல் எழுச்சிப் பேரவை சார்பிலான இந்தப் போராட்டத்தில் 48 கிராம மக்கள் பங்கேற்றனர்.
ஏற்கனவே இனயம் துறைமுக திட்டத்துக்கு எதிராக பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications